நீதியரசர் கிருஷ்ணசுவாமி ரெட்டியார் அவர்கள்
சேவா பாரதி தமிழ்நாடு புரவலராக பல வருடங்கள் வழிகாட்டி வந்தார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரிந்த அமரர் திரு
கோவிந்தன்ஜியின் ஓராண்டு
நினைவு தினத்திற்கு வருகை தந்த போது
அவர் அந்த மாவட்டத்தில் நடைபெறும் சேவை கார்யங்களை பார்வையிட்டார்.
குறிப்பாக மீனவர்
கிராமமான சின்ன ஏர்வாடி
வந்து, அந்த கிராமத்தில் உள்ள குடிசை வீட்டு
திண்ணையில் அமர்ந்து இளநீர் குடித்து கொண்டு அந்த கிராமத்து மக்களிடம் சேவா
பாரதியின் சேவை பணியினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
என்பதனை விசாரித்து தெரிந்து கொண்டார்.