Friday, 15 April 2016

மலரும் நினைவுகள் - நீதியரசர் கிருஷ்ணசுவாமி ரெட்டியார்

நீதியரசர் கிருஷ்ணசுவாமி ரெட்டியார் அவர்கள் சேவா  பாரதி  தமிழ்நாடு  புரவலராக   பல  வருடங்கள்  வழிகாட்டி  வந்தார்கள்.   ராமநாதபுரம்  மாவட்டத்தில்    பணிபுரிந்த  அமரர்   திரு கோவிந்தன்ஜியின்    ஓராண்டு நினைவு தினத்திற்கு வருகை  தந்த   போது அவர்   அந்த  மாவட்டத்தில்  நடைபெறும்   சேவை  கார்யங்களை   பார்வையிட்டார். குறிப்பாக  மீனவர் கிராமமான   சின்ன  ஏர்வாடி வந்து,  அந்த  கிராமத்தில்  உள்ள  குடிசை  வீட்டு திண்ணையில்  அமர்ந்து    இளநீர்  குடித்து  கொண்டு  அந்த    கிராமத்து  மக்களிடம்  சேவா பாரதியின்    சேவை  பணியினால்  என்னென்ன   மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளது என்பதனை  விசாரித்து  தெரிந்து  கொண்டார்


அன்று  மாலையில்  நடைபெற்ற  பாலர்பள்ளி     மற்றும்  சேவா  பாரதி    ஆண்டு  விழாவில்  கலந்து கொண்டு  சேவா பாரதி   பணிகளை   மிகவும்  பாராட்டி  பேசினார். கிராம  மக்கள்  ஒற்றுமையாக  இருந்தால்  கிராமம்  முன்னேற்றம் அடையும்குடி   பழக்கத்தை  விட்டு  சேமிக்கும்  பழக்கத்தை  நடைமுறைக்கு  கொண்டு  வரவேண்டும். இதற்க்கு  சேவா பாரதி  செயல்  ஆற்ற  வேண்டும்  என்று  வழிகாட்டினார்ராமநாதபுரம்  மாவட்டத்தில்  கிராமம்  கிராமமாக சேவா  பணிகள்  விரிவடைந்தததை பாராட்டி  பேசினார். அமரர்  டாக்டர் செங்கோட்டையன்  ஜி  அவர்களின்  மருத்துவ  முகாமிற்காக சேவா பாரதிக்கு  நன்கொடையாளர்  மூலம்  பெற்ற  டெம்போட்ரக்ஸ்  வண்டிக்கு,  டிரைவருக்கான  உதவிதொகைக்காக  people charity fund என்ற  அறகட்டளை மூலம்  தொடர்ந்து  நிதி  ஏற்பாடு செய்து  கொடுத்தார்.  

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...