காங்கிரஸ் ஆதரவாளரான பெரிய குடும்பத்தை சார்ந்த டாக்டர். K.S. செங்கோட்டையன்.
அவர்கள் முழு நேரமாக சேவை பணியாற்வதர்க்காக ராமேஸ்வரம் வந்தபோது திரு கோவிந்தன் நாடார் அவர்கள் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். பெரிய பங்களாவில் தங்கி வாழ்ந்து வந்த அவர் சாதாரண வசதிகளுடன் தங்குவதற்கு தயார் ஆனார். கிராமம் கிராமமாக கால்நடையாகவும், மிதிவண்டியில் பின்னால் அமர்ந்தும் மருத்துவ சேவைக்கு ராமேஸ்வரம் தீவிலும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் சென்று வந்தார். அவருடைய சேவையை பார்த்து என் ஆர் ஐ நன்கொடையாளர் மூலம் ஒரு டெம்போ ட்ராக்ஸ் ஏற்பாடு செய்து அதன் மூலம் மேலும் பல கிராமங்கள் செல்ல கூடிய ஏற்ப்பாடு செய்தோம்.
மருத்துவ சேவைக்கு உதவியாளராக துவக்க காலத்திலிருந்தே திரு ஷண்முகசாமி அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். சின்ன ஏர்வாடி பக்கமுள்ள கிராமங்களில் சேவா வ்ரதி செல்வி லதா அவர்கள் மருத்துவ முகாமிற்கு ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். ஏர்வாடி மெயின் ரோடிலிருந்து ஆதம்சேரி செல்வதற்க்கு சரியான சாலை வசதி இல்லாத நிலையை பார்த்து டாக்டர் செங்கோட்டையன் ஜி அவருடைய நண்பர் திரு மலைசாமி எம் பி மூலம் சாலை வசதி ஏற்பாடு செய்து கொடுத்தார். அவருடைய அனுபவ மருத்துவ முறையினால் பலன் பெற்றோர் ஏராளம்.
சில உதாரணங்கள்:-
ராமநாதபுரத்தில் நம்மிடம் தையல் டீச்சராக இருந்த முத்துலட்சுமி மகளுக்கு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஹார்ட் ஆப்பரேசனுக்காக முதலமைச்சர் உதவிதொகைக்காக மனு அனுப்பி இதய அறுவை சிகிச்சை முடிவாகி இருந்தது. டாக்டர் ரிப்போர்ட் பார்த்தார் கவலைபடவேண்டாம், நான் மருந்து கொடுக்கிறேன், ஒரு வாரத்தில் மாற்றம் தெரியும் என்று மருந்து கொடுத்தார்கள். என்ன ஆச்சரியம்! மீண்டும் மருத்துவமனை போகவேயில்லை, இன்று அந்த பெண்மணி 3 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.
டாக்டருக்கு உதவியாளரான சகோதரி அன்னபூரணியின் அம்மாவிற்கு மார்பக புற்று நோய் என்று மருத்துவமனையில் கூறிவிட்டார்கள், நம்ம டாக்டர் மருந்து கொடுத்து மிக எளிமையாக சரிப்படுத்திவிட்டர்கள்.
ராமேஸ்வரம் கோஸ்வாமி மடத்தில் ஒருதடவை கிரிஜா சேஷாத்ரி அம்மா வந்தபோது டாக்டரை அறிமுகம் செய்தபோது, அவர்கள் தன்னுடைய கை விரல்களை காட்டி இது என்ன டாக்டர் ? இதற்க்கு என்ன செய்யலாம்? என்று கவலையோடு கேட்டார். பலரிடம் பார்த்து விட்டேன், மாற்றமே இல்லை என்றுகூறினார். டாக்டர் ஒரு மருந்து எழுதிக்கொடுத்தார். சில நாள்கள் கழிந்து சென்னையில் ராமச்சந்திரா மருத்துமனையில் மானனீய சூரிஜியை பார்க்க நான் சென்று இருந்த போது கிரிஜா அம்மாவும் அங்கு வந்து இருந்தார்கள். சூரிஜியை பார்த்துவிட்டு நான் திரும்பும்போது எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது அந்த மருந்து எங்கேயுமே கிடைக்கலை என்றார்கள். டாக்டர் கொடுத்த சீட்டை தன்னுடைய கைப்பையிலுருந்து எடுத்து கொடுத்தார்கள். நான் அதை வாங்கி கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள மருந்து கடையில் விசாரித்த போது அங்கு இருந்தது. வாங்கி கொடுத்தேன். அடுத்தது ஒரு மாதத்தில் அவர்களை சந்தித்த போது அவர்கள் தன்னுடைய கை விரல்களை காட்டி எனக்கு குணமடைந்து விட்டது. டாக்டருக்கு எனது நன்றியை சொல்லுங்கள் என்று மிகவும் மகிழ்ச்சியோடு கூறினார் .

மானனீய. சூரிஜி யின் கட்டாயத்தின் பேரில் டாக்டர் அவர்கள் தன்னுடைய வீட்டிக்கு திரும்பி வந்து ஓய்வு எடுத்து வந்தார்.
குறிப்பு: கோபி அருகில் உள்ள கரளீயம் மலைபகுதியில் மூன்று துவக்கப்பள்ளிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment